கொஞ்ச நாளா இந்த Carton சுமக்கிற வேலையால என்னால கவிதையே எழுத முடியலை… அதனால நீங்களும் கொஞ்ச நாள் நிம்மதியா இருந்திருப்பீங்க… ஆனா என்ன செய்ய? இன்னைக்கு உங்களுக்கு கெட்ட காலம் ஆரம்பிக்கிறது, ஏன்னா இன்னைக்கு ஒரு கவிதை போடுறேன் இல்ல அதுதான்…
முதல் முறையாய் காதலிக்கு!…
தூக்கத்திலும் என் பெயர் சொல்லி உளரும் என் தேவதைக்கு….
குழல் இனிது யாழினிது என்பர் தம் காதலி கொஞ்சல் மொழி கேளா தவர் !!
உன்னில், உன் கண்ணில் காதல் விதைக்க நான் என்னை விண்ணில் புதைத்தேன்!
இன்று உன் தங்கக் காதல் கூண்டில் இருக்கும் கிளி நான்!
வாசற்கதவருகே காரிலிருந்து இறங்கும் என் காதல் தேவதைக்கு
காத்திருந்தேன் பல யுகங்கள்! சில வினாடி என என் கைக்கடிகாரம் பொய் சொல்கின்றது!
ஜாமங்கள் கடந்தபின்
உன் வீடு வந்து சேரும் என்னை நீ நெஞ்சோடு அணைக்கையில்
தான் களைப்பே சுகமாய்
நிலைப்பதை உணர்ந்தேன் கண்ணே!
ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்களில் கிரெடிட் கார்ட் தேய்த்து
பிட்சா தின்று வீடு திரும்புகையில், சீட்பெல்ட் மாட்டி அமர்ந்திருக்கும்
உன் கண்களில் காதல் விளையாடுமடி!
அதற்கு என்னில் மறுமொழி இல்லையடி!
படிப்பில் உயர்ந்து விட்டோம். பணத்தால் உயர்ந்துவிட்டோம்.
நாகரீகத்தாலும் உயர்ந்துவிட்டோம்.
நம் காதல்தான் சிறிது காலம் இவற்றுக்குள் மறைந்துவிட்டது.
இப்போது என் நண்பன் கூறுகிறான்…”பல்லு இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுகிறான்!”
எனக்கு முன்பு இப்படிதான் இருந்திருக்கிறது…
அதனால் தான் என்னவோ காதல் கிடைத்தவுடன்
அளவுக்கு அதிகமாகவே ஆட்டம் போட்டுக் கொண்டு இருக்கிறேன்.
நீ பேசுவது..இலக்கியம் இல்லா இன்னிசை!…இலக்கணமற்ற தேன் மழை!
நீ கொஞ்சுவது, அறுந்தறுந்து விழும் அழகிய கவிதை! நீ ஒரு சிங்காரச் சரிதை!
உன் சிரிப்பு சில்லறைக் காசுகளாய் உதிரும் போதெல்லாம் –
என் கோபங்களும் உதிர்ந்து போகும்!
உன்னை முதன்முதலாய் கண்ட பொழுது என்னுயிர்
மறுமுறை ஜனிக்கின்ற வலியை
உணர்ந்தேன் கண்ணே !
நொடிக்கொருமுறை நீ சிணுங்கையில் தான் உயிரும் அதிர்கிறதே!
உன்னைக் கொஞ்சிடத்தான் என் ஒவ்வொரு அசைவும் முயலுதே!
என் மடிமீது நீ கிடக்கையில் மனதுக்குள் மத்தாப்பு பூக்குதே!
எப்பொழுது உன் கொஞ்சல் மொழி கேட்பேன் என என்னுயிர் துடிக்குதே!
ஆம்…குழல் இனிது யாழினிது என்பர் தம் காதலி கொஞ்சல் மொழி கேளா தவர் !!
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்…! J
ம்ம்…இனி நீ என்னை சமாளிப்பது கடினம்….!
செய்தித் துளிகள்: 2008இல் இது தான் என் முதல் கவிதை!











